Thursday 18 December 2014

பறையர் சான்றோர்கள்


ஆதித் தமிழர்கள், வேதங்களும், அறிவும் அமைந்து இருந்தவர்கள் பறையர்கள் என்பதிர்க்கான கல்வெட்டுக்கள். 
சொக்கப்பட்டன் என்றசிவபிராமணர்கள் கையெழுத்திடத் தெரியாத நிலையில் தற்குறிஇட்டுள்ளனர்ஆனால் இதே கல்வெட்டில் அரசர் மிகா பறையர்,கானாட்டுப்பறையன்என்பவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். (IPS 421).


பறையன் தாழ்த்தப்படவன் என்றால் ஆட்சாரமான சிவனடியார்கள் கட்டாயம்  தனது அருகில் கூட அமரவைத்து இருக்க மாட்டார்கள். நந்தனார் பறையரை தற்பொழுது வரை அணைத்து சிவ பக்தர்களும் வணங்கி வருகின்றார்கள். என்பது குறிப்பிடத் தக்கது. தலித் ஒருபொருளை தொட்டால் தீட்டு  தலித்தை தொட்டாலும் தீட்டு  என்று கருதக் கூடிய, காட்டுமிராண்டி தனமான கொள்கைகளை கொண்ட, மூட மதத்தை சார்ந்தவர்கள் இன்றுவரை ஒரு தலித்தை வழிபட்டுக்கொண்டு தான் வருகின்றார்கள். 

இன்று உலகே போற்றக்கூடிய திருவள்ளுவர் வள்ளுவ ஜாதியில் பிறந்த பறையர் தான். 

வேட்டையாடி இறைச்சி உண்ணும் வேடன்.திண்ணன் எனப்படும் கண்ணப்ப நாயனார்

 உள்ளத்திலே அன்பெனும் மலரால் இறைவனைப்பூசை செய்தால் மட்டும் போதாது. அன்புருவம் ஆகிவிட வேண்டும். கண்ணப்ப நாயனார் காளத்தி இறைவனைக் கண்டவுடனேயே அன்பு உருவமானார். தத்துவங்கள் எல்லாம் நிங்கப் பெற்றவராக சிவப்போராளியில் கலந்தார். புண்ணியமென்றும் பாவமென்றும் தெரியாது வேட்டுவர் தொழிலில் புரியும் கண்ணப்பனார் சிவத்தோடு கலந்து ஒப்பற்ற அன்பரானார். அவர் உள்ளமும் உணர்வுகளும் அன்பில் திளைத்து அவருடைய உயிரே இறைவனுக்கு அர்ப்பணம் ஆயிற்று. இறைவனே சிவகோசாரியருக்கு விளக்குகின்றார்.
"அவனுடைய வடிவெல்லா நம்பக்கல் அன்பென்றும்
அவனுடைய அறிவெல்லா நமை அறியும் அறிவென்றும்
அவனுடைய செலயலெல்லா நமக்கு இனியவா என்றும்
அவனுடைய நிலை இவ்வாறு அறி c" என்று அருள் செய்வார்
(பெரியபுராணம் கண்ணப்ப நாயனார் புராணம் - 157)
சங்ககாலப் புலவர்களில் ஒருவரான ஔவையார் அதியர் குடியினர் எனப்படும் ஆதிதிராவிட இனத்தை சார்ந்தவர். சான்று Click here வரலாறு பகுதி 


No comments:

Post a Comment