Friday 19 December 2014

திருவள்ளுவர் வள்ளுவப் பறையரே

அய்யன்.திருவள்ளுவர் வள்ளுவ வேளாள பறையர்கள் இனத்தை சார்ந்த புலவர்  ஐயன் என்னும் சொல் தந்தையைக் குறிக்க பறையர் ஆளும் சொல்லாகும். ஐயன் என்னும் சொல் பறையரும்ஐயா என்னும் விளிவடிவம் பாண்டி நாட்டு வெள்ளாளர்முதலியார் முதலிய பல குலத்தாரும் தந்தையைக் குறிக்க ஆளும் சொல்லாகும். திருநாயனார்குறிச்சியின் பக்கத்தில் இருக்கின்ற கூவைமலைனு,பேச்சிப் பாறையை ஒட்டி உள்ள மலைப் பகுதிகளில் வசிக்கும் காணி என்னும் பழங்குடி மக்கள், மற்றும் வள்ளுவர் என்கின்ற ஆதிதிராவிடர்கள் வள்ளுவரை தெய்வமாக வணங்கி வருகின்றார்கள். நாகர்கோவிலைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர், டாக்டர் பத்மநாபன் கூறுவது வள்ளுவர் பறையர் இனத்தை சார்ந்தவர் என்பதினால் மேல் ஜாதி இனத்தவர்கள் என்று தங்களை சொல்லிதிரிபவர்கள் வள்ளுவரின் முக்கிய பல சான்றுகளை தற்காலத்தில் அழித்து இருக்கின்றார்கள். ஆனால் திருவள்ளுவர் வள்ளுவப் பறையர் இனத்தை சார்ந்தவர் முற்றும் குமரி மாவட்டத்தில் பிறந்தவர்.  இத் தகவல்களைத் தொகுத்து 1995-ல் அரசு ஆவணங்களில் பதியப்பட்டு இருக்கின்றது. திருவள்ளுவர் பறையர் என்பதினால் தமிழகத்தில்அதிக அரசுப் பேருந்துகளில் திருக்குறளை புறக்கணித்து புறக்கணிக்க ஆரம்பித்து விட்டார்கள், வள்ளுவர் கோட்டமும் பராமரிக்கப் படுவதில்லை.
திருவள்ளுவர் வள்ளுவ  பறையர் என்பதை பற்றி கபிலர் அகவல்
கபிலர் அகவல்
நான்முகன் படைத்த நானாவகை உலகில்
ஆன்ற சிறப்பின் அரும்பொருள் கூறுங்கால்
ஆண்முதிதோ பெண்முதிதோ அன்றி அலிமுதிதோ
நாள்முதிதோ கோண்முதிதோ நல்வினை முதிதோ
தீவினை முதிதோ

செல்வச் சிறப்போ அறிவு சிறப்போ
தொல்லை மாஞாலம் தோற்றமோ படைப்போ

எல்லாப் பிறப்பும் இயற்கையோ செயற்கையோ
காலத்தால் சாவரோ பொய்ச்சாவு சாவரோ

நஞ்சுறு தீவினை துஞ்சுமோ துஞ்சாதோ
துஞ்சும்போது அந்தப் பஞ்சேந்திரியம்

என்செயா நிற்குமோ எவ்விடத்து ஏகுமோ
ஆற்ற லுடையீர் அருந்தவம் புரிந்தால்

வேற்றுடம்பு ஆகுமோ தமது உடம்பாகுமோ
உண்டியை உண்குவது உடலோ உயிரோ

உலகத் தீரே உலகத் தீரே
நாக்கடிப் பாக வாய்ப்பறை யறைந்து

சாற்றக் கேண்மின் சாற்றக் கேண்மின்
மனிதர்க்கு வயது நூறுஅல்லது இல்லை

ஐம்பது இரவில் அகலும் துயிலினால்
ஒட்டிய இளமையால் ஓர் ஐந்து நீங்கும்

ஆக்கை இளமையில் ஐம்மூன்று நீங்கும்
எழுபது போக நீக்கு இருப்பன முப்பதே.

அவற்றுள்

இன்புறு நாளும் சிலவேயதா அன்று
துன்புறு நாளும் சிலவே யாதலால்

பெருக்காறு ஒத்தது செல்வம் பெருக்காறு
இடிகரை யொத்தது இளமை இடிகரை

வாழ்மரம் ஒத்தது வாழ்நாள் ஆதலால்
ஒன்றே செய்யவும் வேண்டும் ஒன்றும்

நன்றே செய்யவும் வேண்டும் நன்றும்
இன்றே செய்யவும் வேண்டும் இன்றும்

இன்னே செய்யவும் வேண்டும் இன்னும்
நாளை நாளை என்பீராகில்

நமனுடை முறைநாள் ஆவதும் அறியீர்
நம்முடை முறைநாள் ஆவதும் அறியீர்

எப்போது ஆயினும் கூற்றுவன் வருவான்
அப்போது அந்த கூற்றுவன் தன்னைப்

போற்றவும் போகான் பொருளொடும் போகான்
சாற்றவும் போகான் தமரொடும் போகான்

நல்லார் என்னான் நல்குரவு அறியான்
தீயார் என்னான் செல்வர் என்று உன்னான் 40
தரியான் ஒருகணம் தருகணாளன்

உயிர்கொடு போவான் உடல்கொடு போகான்
ஏதுக்கு அழுவீர் ஏழை மாந்தர்காள்

உயிரினை இழந்தோ உடலினை இழந்தோ
உயிர் இழந்து அழுதும் என்று ஓதுவீராகில்

உடலினை அன்றுஅலாது இன்றும் காண்கிலீர்
உயிரினை இழந்த உடலது தன்னைக்

களவுகொண்ட கள்வனைப் போலக்
காலும் ஆர்த்துக் கையும் ஆர்த்துக்

கூறை களைந்து கோவணம் கொளுவி
ஈமத்தீயை எரி எழ மூட்டிப்

பொடிபடச் சுட்டுப் புனலிடை மூழ்கிப்
போய்த் தமரோடும் புந்தி நைந்து அழுவது

சலம் எனப் படுமோ சதுர் எனப்படுமோ.
பார்ப்பன மாந்தர்காள் பகர்வது கேண்மின்

இறந்தவராய் உமை இல்லிடை இருத்திப்
பாவனை மந்திரம் பலபட உரைத்தே

உமக்கு அவர் புத்திரர் ஊட்டின போது
அடுபசியால் குலைந்து ஆங்குஅவர் மீண்டு 60.

கைஏந்தி நிற்பது கண்டதுயார் புகலீர்
அருந்திய உண்டியால் ஆர் பசி கழிந்தது?

ஒட்டிய மிலேச்சர் ஊணர் சிங்களர்
இட்டிடைச் சோனகர் யவனர் சீனத்தர்

பற்பலர் நாட்டினர் பார்ப்பார் இலையால்
முற்படைப்பு அதனில் வேறாகிய முறைமையால்

நால் வகைச் சாதி இந்நாட்டினில் நாட்டினீர்
மேல்வகை கீழ்வகை விலங்குவது ஒழுக்கால்

பெற்றமும் எருமையும் பிறப்பினில் வேறே
அவ்விரு சாதியில் ஆண்பெண் மாறிக் 70

கலந்து கருப்பெறல் கண்டது உண்டோ?
ஒருவகைச் சாதியா மக்கட் பிறப்பில் ஈர்

இரு வகையாக நீர் இயம்பிய குலத்து
ஆண் பெண் மாறி அணைதலும் அணைந்த பின்

கருப்பொறை உயிர்ப்பதும் காண்கின்றிலீரோ?
எந்நிலத்து எந்தவித்து இடப்படுகின்றதோ

அந்நிலத்து அந்தவித்து அங்கு உரித்திடும் அல்லால்
மாறி வேறாகும் வழக்கம் இன்றில்லையே

பூசுரர் புணர்ந்து புலைச்சியர் ஈன்ற
புத்திரர் ஆயினோர் பூசுரர் அல்லரோ 80

பெற்றமும் எருமையும் பேதமாய்த் தோன்றல் போல்
மாந்தரில் பேதமாய் வடிவு எவர் கண்டுளார்

வாழ்நாள் உறுப்புமெய் வண்ணமோடு அறிவினில்
வேற்றுமை ஆவதும் வெளிப்படல் இன்றே

தெந்திசைப் புலையன் வடதிசைக்கு ஏகில்
பழுது அற ஓதிப் பார்ப்பான் ஆவான்

வடதிசைப் பார்ப்பான் தெந்திசைக்கு ஏகின்
நடையது கோணிப் புலையன் ஆவான்

அது நிற்க,

சேற்றில் பிறந்த செங்கழுநீர் போலப் பிரமற்குக்
கூத்தி வயிற்றில் பிறந்த வசிட்டரும், வசிட்டர்க்குச்
சண்டாளி வயிற்றில் பிறந்த சத்தியரும், சத்தியர்க்குப்
புலைச்சி தோள் சேர்ந்து பிறந்த பராசரும், பராசருக்கு மீன்
வாணிச்சி வயிற்றில் பிறந்த வியாசரும் இந்நால்வரும்

வேதங்கள் ஓதி வேன்மைப் பட்டு
மாதவராகி வயங்கினர் அன்றோ?

அருந்தவ மாமுனியாம் பகவற்குக்
கருவூர்ப் பெரும்பதிக் கண்பெரும் புலைச்சி

ஆதி வயிற்றினில் அன்று அவதரித்த
கான்முளை யாகிய கபிலனும் யானே 100

என்னுடன் பிறந்தவர் எத்தனை பேர் எனில்
ஆண்பால் மூவர் பெண்பால் நால்வர்

யாம்வளர் திறம் சிறிது இயம்புவல் கேண்மின்
ஊற்றுக்காடு எனும் ஊர் தனில் தங்கியே

வண்ணார் அகத்தில் உப்பை வளர்ந்தனள்
காவிரிப்பூம் பட்டினத்தில் கள்விலைஞர் சேரியில்

சான்றார் அகம்தனில் உறுவை வளர்ந்தனள்
நரம்புக் கருவியோ ந்ண்ணிடு சேரியில்

பாணர் அகத்தில் ஔவை வளர்ந்தனள்
குறவர் கோமான் கொய்தினைப் புனஞ்சூழ்

வண்மலைச் சாரலில் வள்ளி வளர்ந்தனள்
தொண்டை மண்டலத்தில் வண்டமிழ் மயிலைப்

பறையர் இனத்தில் பிறந்தார்
அரும்பார் சோலைச் சுரும்பார் வஞ்சி

அதிகன் இல்லிடை அதிகமான் வளர்ந்தனன் 115
பாரூர் நீர் நாட்டு ஊர் தன்னில்

அந்தணர் வளர்க்க யானும் வளர்ந்தேன்.
ஆதலால்,

மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ?
காற்றும் சிலரை நீக்கி வீசுமோ 110

மாநிலம் சுமக்க மாட்டேன் என்னுமோ
கதிரோன் சிலரைக் காயேன் என்னுமோ

வாழ்நான்கு சாதிக்கு உணவு நாட்டிலும்
கீழ்நான்குச் சாதிக்கு உணவு காட்டிலுமோ

திருவும் வறுமையும் செய்தவப் பேறும்
சாவதும் வேறிலை தரணியோர்க்கே

குலமும் ஒன்றே குடியும் ஒன்றே
இறப்பும் ஒன்றே பிறப்பும் ஒன்றே

வழிபடு தெய்வமும் ஒன்றே ஆதலால்
முன்னோர் உரைத்த மொழி தவறாமல் 120

எந்நாள் ஆயினும் இரப்பவர்க்கு இட்டுப்
புலையும் கொலையும் களவும் தவிர்த்து

நிலைபெற அறத்தில் நிற்பதை அறிந்து
ஆணும் பெண்ணும் அல்லதை உணர்ந்து

பேணி உரைப்பது பிழைஎனப் படாது

சிறப்பும் சீலமும் அல்லது

பிறப்பு நலம் தருமோ பேதையீரே! 127

முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்'


சென்னைதமிழ் நாடு

செம்மொழி மாநாட்டுச் சிந்தனைகள் - திருக்குறள்:
திருவள்ளுவர் பிறப்பைக் குறித்து பார்ப்பனர் நுழைத்த கதை வரலாறு
முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்
திருக்குறள் கிடைத்தது எப்படி? திருவள்ளுவரின் பிறப்பைக் குறித்து அவர் ஆதி, பகவன் என்பவர்களுக்குப் பிறந்தவர்கள், ஆதி தாழ்த்தப் பட்டவர், பகவன் பார்ப்பனன், அவர்களுக்குப் பிறந்த திருவள்ளுவர் வாசுகி என்ற வைசிய குலப் பெண்ணை மணந்தார் எனும் கற்பனைக் கதையை ஆதார-மில்லாமல் அய்யர் ஒருவர் எழுதி வைத்துள்ளார் எனும் உண்மையை உலகுக்கு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சீரும், சிறப்புமாக நடைபெற உள்ள இந்தக் கால வேளையில் தெரிவிக்கும் வரலாற்றுச் சான்று உள்ளது. முதன் முதலில் திருக்குறள்:
திருவள்ளுவரின் திருக்குறள் ஓலைச் சுவடியில் இருந்து முதன் முதலில் அச்சிட்டவர் எல்லிஸ் எனும் ஆங்கி-லேயர். அதுவரையில் ஓலைச் சுவடி-யிலே திருக்குறள் இருந்தது. திருக்குறள் அச்சில் வந்த வரலாறு இது.
1823 இல் சென்னைக்குப் பணியாற்ற இங்கிலாந்தில் இருந்து எல்லிஸ் அய்.சி.எஸ்.வந்தார். வந்தவர் தமிழ் படிக்க விரும்பினார். சென்னையில் தமிழ்ச்-சங்கம் 1825_இல் ஏற்படுத்தினார். இராயப் பேட்டையில் உள்ள பவானி கோயில் கிணற்றில் திருக்குறள் கல்லில் செதுக்கப்-பட்டிருந்ததைக் கண்டு பிடித்தார். திருக்குறள் ஏட்டுச் சுவடி ஒன்றைக் கந்தசாமி என்பவர் தாம் வேலை பார்த்த ஆரிங்டன் துரை வழி எல்லிஸ் துரை-யிடம் சேர்த்தார். கந்தப்பன் என்பது அவர் பெயர் எனவும் கூறுகின்றார். இவர் அயோத்திதாசரின் பாட்டனார் என்று கூறுகின்றார்.
எல்லிசுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்க வந்தவர்கள் பார்ப்பனத் தமிழ் ஆசிரியர்-கள். அவர்களிடம் கந்தசாமி திருக்குறள் கொடுத்த விவரத்தை எல்லிசு கூறினார்.
தீண்டத்தகாதது திருக்குறள்:
தமிழ் கற்றுக் கொடுக்க வந்த பார்ப்-பனர்கள் திருக்குறள் தீண்டத்தகாதது என்று கூறினர். கந்தசாமி தீண்டத்தகாத-வர் எனவும் அவர் கொடுத்த திருக்குறள் தீண்டத் தகாதது எனவும், காரணம் திரு-வள்ளுவர் ஆதி என்னும் புலைச்சியின் மகன் என்றும் கூறினர். இச்செய்தி நம் கற்பனையல்ல. செந்தமிழ்ச் செல்வி இதழில் வெளிவந்து 28.11.2008 விடு-தலையிலும் இடம் பெற்ற செய்திதான்.
ஏன் இப்படிப் பார்ப்பனர்கள் கருதுகிறார்கள் என்று கந்தசாமியை அழைத்து எல்லிஸ் கேட்டிருக்கிறார். அதற்குக் கந்தசாமி, எங்களுக்கும் இவர்களுக்கும் விரோதம். எங்கள் வீதிக்குள் பார்ப்பனர்கள் வந்தால் உங்கள் பாதம் பட்ட இடம் பழுதாகி விடும் என்று சொல்லிக் கொண்டு இவர்-களைத் துரத்தி பார்ப்பனர்கள் வந்த வழியிலும், சென்ற வழியிலும் சாணத்-தைக் கரைத்துத் தெளித்து சாணச்சட்டி-யையும் உடைத்து வருகிறார்கள் என்று கூறினார்.
உண்மையான காரணத்தைப் புரிந்து கொண்ட எல்லிஸ் திருக்குறளை ஆழமாகப் படித்தார்.
திருக்குறள் நூலைப் பிரதி, திருவள்-ளுவ மாலை, நாலடியார் ஆகிய-வற்றைக் கந்தப்பனிடம் பெற்றார். திருக்-குறளைஆங்கிலத்தில் மொழி பெயர்க்-கவும் தொடங்கினார். அவர் திடீரென இறந்ததால் முழுவதும் அவரால் குறளை மொழி பெயர்க்க இயல-வில்லை.
தமிழ் வித்வான் தாண்டவராய முதலியார், மானேஜர் முத்துசாமிப் பிள்ளை ஆகியவர்களை எல்லிஸ் ஓலைச் சுவடியிலிருந்த திருக்குறள் மூலத்தைப் படியெடுக்கச் செய்தார். அதன் பின் அதனை அச்சிட்டார். இவ்-வாறாகவே முதல் திருக்குறள் நூல் அச்சில் வந்தது. எல்லிஸின் திருக்குறள்:
எல்லிஸ் திருக்குறள் பாக்களுக்குச் சில சார்பு நூல்களையும் சேர்த்துத் தம் பெயரால் திருக்குறள் புத்தகத்தை 1834 ஆம் ஆண்டில் அச்சிட்டார். ஆக முதல் திருக்குறள் அச்சுப் பதிப்பு வெளி-வந்த ஆண்டு 1834, அதில் திரு-வள்ளுவர் பிறப்புப் பற்றிய கற்பனைக் கதையெல்லாம் கிடையாது. அதாவது தாழ்த்தப்பட்ட தாய், பார்ப்பனத் தந்தை எனும் புனை சுருட்டெல்லாம் கிடை-யாது.
விசாகப்பெருமாள் அய்யர்:
பிறகு இந்தக் கதை எப்படிப் பிறந்தது. இந்தக் கதையை நுழைத்தவர் ஒரு பார்ப்பனர். அவர் விசாகப் பெரு-மாள் அய்யர் என்பவரின் தம்பி சரவணப் பெருமாள் அய்யர். இவ்வாறு கற்பனைக் கதையை அச்சிட்ட ஆண்டு 1837. இந்த சரவணப் பெரு-மாள் அய்யர் அச்சிட்ட திருக்குறள் புத்தகத்தின் முகப்பில் ஆதியென்றும் பகவனென்றும் பொருத்தினார். அவ் வாக்கியங்களைக் கொண்டு ஆதியெ-னும் தாழ்த்தப்பட்ட பெண்ணும், பகவன் எனும் பார்ப்பனனும் இருந்ததாகவும், முறைகேடான ஒழுக்கத்தால் ஏழு பிள்ளைகளை அவர்கள் பெற்றதாகவும், அவர்களில் ஒருவரான திருவள்ளுவ நாயனார் மயிலாப்பூரில் தங்கி, ஒரு வைசிய குலப் பெண்ணை மணந்து திருக்குறளைப் பாடினார் எனச் சிறிய அகவற் பாவினைப் பாடினார். ஆனால் அந்த அகவற் பாவினைப் பாடியவர் யார் என்று குறிப்பிடாமல் விசாகப் பெருமாளய்யர் அச்சிட்ட புத்தகத்தில் கடைசியில் இடம் பெறச் செய்து தாம் அச்சிட்ட திருக்குறளை வெளியிட்டார்.
பார்ப்பனியம் இப்படித் தன் வேலை-யைக் காட்டியிருக்கிறது. திருக்குறள் வெளியிட்ட பணிக்கு நாம் நன்றி பாராட்டுகிறோம். ஆனால் இத்தகு நஞ்சை விதைத்திருப்பதை 250 ஆண்டுகள் கடந்த பின்னும் நம்மால் சுட்டிக்காட்டாது இருக்க இயலவில்லை.
ஏனென்றால் எல்லிசின் உதவியால் தாண்டவ ராய முதலியாரும், முத்துசாமிப் பிள்ளையும் ஓலைச் சுவடியில் உள்ளதை உள்ளபடி 1831 இல் அச்சிட்ட, திருக்குறள் இரண்டு நூல்களிலும் இல்லாத செய்தி, அதன்பின் அய்யர்வாள் வெளியிட்ட புத்தகங்களில் நுழைந்திருக்கிறது.
விசாகப் பெருமாள் அய்யர் திருக்குறளின் பின்னே இடம் பெறச் செய்த அகவற்பாவில் ஏழு பிள்ளை-கள் ஆதி எனும் பறையர் இனத்த-வருக்கும் பகவன் என்றபார்ப்பனனுக்-கும் பிறந்ததோடு நிறுத்தி விட்டார்.
சரவணப்பெருமாள் அய்யர்:
அவருடைய தம்பி அதற்கு மேலே போய் ஒரு புளுகை கற்பனையை _ அவிழ்த்துவிட்டார். இதுவும் ஓர் அகவற்பாவில் பாடப்பட்டது. சரவணப் பெருமாளய்யரின் நான்காவது அச்சிடப் பெற்ற திருக்குறளில் ஏழு பிள்ளைகளில் ஒவ்வொரு பிள்ளையும் மண்ணில் பிறந்தவுடன் ஒவ்வொரு வெண்பாவைப் பாடியது என ஏழு வெண்பாக்களைச் சேர்த்துவிட்டார்.
விசாகப் பெருமாள் அய்யரின் கற்பனைக் கதை பாருங்கள். அவரு-டைய அகவலில் சோழ நாட்டுள் ஒரு பார்ப்பானுக்கு, தன் பார்ப்பன மனைவியால் பகவன் எனும் மகன் பிறந்து அவன் வளர்ந்து கருவூர் புலை மகள் ஆதி என்பவளை வந்தடுக்க அவளை அடித்துத் துரத்தி விட்டுப் போய் மறுபடியும் வரும் போது அவளைச் சந்தித்து இருவரும் ஏழு பிள்ளைகள் பெற்றனர் என அகவற்பா பாடிவிட்டார்.
முத்துவீரப்பிள்ளை:
விசாகப் பெருமாள் அய்யரும், சரவணப் பெருமாள் அய்யரும் விதைத்த நச்சு விதையை முத்து-வீரப்பிள்ளை என்ற தமிழர்தம் ஆணைப்படி வேதகிரி முதலியார் என்பவர் திருக்குறளைஅச்சிட்டு விதைத்தார். 1847 இல் இந்தத் திருக்குறள் நூல் வெளி வந்தது.
அதில் உள்ள கதை இது. படைப்புக் கடவுள் என்று சொல்லப்-படும் பிரம்மா யாகம் ஒன்று செய்து அதில் கலைமகளை உற்பத்தியாக்கி, அவளையே மணந்து, மறுபடியும்-அகஸ்தியராய்த் தோன்றி சமுத்திரக் கன்னியை மணந்தார்.
இருவருக்கும் பெருஞ்சாகரன் என்பவன் பிறந்தான். பெருஞ்சாகரன் திருவாரூர் புலையர் வகுப்புப் பெண்-ணைக்கூடி பகவன் என்பவனைப் பெற்றானாம். பகவன் வளர்ந்து பிரம்ம வம்சத்தில் தவமணி என்பவரின் அருண்மங்கை என்னும் பார்ப்பனப் பெண்ணைக்கூடி ஒரு பெண்ணைப் பெற்றுவிட்டு விராலிமலைக்குத் தவம் செய்யச் சென்று விட்டாராம்.
அப்பெண் குழந்தையை உறையூர் பெரும் பறையன் ஒருவர் கண்டெடுத்து வளர்த்து வந்தார். அப்போது அச்சேரியிலுள்ளவர்கள் அனைவரும் மண்மாரியால் மாண்டுபோயினர். இந்தப்பெண் ஒருத்தி மட்டுமே பிழைத்து மேலூர் அக்ரகார நீதி அய்யர் என்பவர் வீட்டில் வளர்ந்து வந்தாள். அப்போது பகவன் என்பவருக்கு ஆதி என்ற இப்பெண்ணை நீதிஅய்யர் அய்ந்து நாளையத் திருமணம் செய்து வைக்க, ஏழு பிள்ளைகளைப் பெற்றதாக இவர் ஒரு கதையை எழுதி வைத்து விட்டார். ஏழு பிள்ளைகளின் பெயரும் அவ்வை, உவ்வை, உறுவை, அதியமான், கபிலர், வள்ளி, திருவள்ளுவர் இப்படிப் பார்ப்பனச் சார்புக் கற்பனை தோன்றியது.
ஆயினும் வேறு உண்மை கூறும் ஆதாரம் இல்லாமல் இல்லை. நல்கூர் வேள்வியார், பெருந்தேவனார் முதலான-வர்கள் எழுதியுள்ள பாடல்கள் கிடைத்-துள்ளன.
நல்கூர் வேள்வியார் பாடல்:
உப்பக்க நோக்கி உபகேசி தோண் மணந்து
உத்தர மாமதுரைகச்சனென்ப விப்பக்க
மாதானு பங்கி மறுவில் புலச் செந்நாப் போதார்
புரை கூடற்கச்சு
இதன் பொருள் என்று கூறப்படுவது:
வடமதுரை கச்சனெனும் அரனுக்கும் உபகேசி எனும் ராகினிக்கும் மகவா-யுதித்து, சகல கலைகளும் கற்று, புத்தசர-வணசங்கம் சார்ந்து அரசநீதி,அரண் அமைச்சர் விதி, ஒழுக்கம், சீலம், கன்மபீடம்,சூத்திர பீடம், வினய பீடம், மெய்யறம், மெய்ப்பொருள், மெய்யின்பம், கன்மபாகை அர்த்த பாகைக் கருத்துக்-களைத் தெள்ளென விளக்கிஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாவால், அறத்துப் பால், பொருட்பால், காமத்துப் பால் என வகுத்தெழுதி ஏனைமக்-களுக்கு நல்வழி காட்டினார் திருவள்ளுவர் என்பதாகும்.
எது எப்படியிருப்பினும் ஒரு பறையரால் நமது தேசத்திற்கு பெருமை தான் 

No comments:

Post a Comment